இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடித்தமான செயல் எனலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் கண்டிராத அரிய வகை உயிரினங்களும் நம் கண்களை கொள்ளை கொள்ளும் அழகிய வண்ண மீன்களும் இருக்கும். அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம். கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பிட்ட பகுதியில் கடலின் தன்மை, புதை படிமங்கள் போன்றவற்றை கண்டறிய நீர் மூழ்கி வீரர்களும் கடலுக்குள் செல்வது உண்டு. அவ்வகையில், பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை சீல் எனப்படும் கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டனின் நார்தம்பெர்லாண்ட் பகுதியைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர் பென் பர்வில்லி அப்பகுதியில் உள்ள ஃபார்னி தீவுகள் உள்ள கடல் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நீந்திக் கொண்டிருந்த கடல் நாய்களில் ஒன்று அதன் கைகளால் அவரது கையை பிடித்தது. பின்னர் அவரை தழுவ முயன்றது. இறுதியில் பென்னும் அதை தழுவினார். அவருடன் சென்ற மற்றொரு நீர்மூழ்கி வீரர், இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில்  பல்வேறு தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. 

 



இந்நிலையில், அந்நாட்டின் ஹல்ட் உலி மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் 30-க்கும் அதிகமானோர் கடந்த சனிக்கிழமை ( டிசம்பர் 14) தங்கத் தாதுவை வெட்டி எடுக்கும் பணியை செய்துகொண்டிருந்தனர். 


 

இதற்கிடையில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு  ஏற்பட்டு தங்கச்சுரங்கத்தின் மேற்பரப்பு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்திற்கு வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். 


 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 27 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிலர் சுரங்கத்திற்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.